சேலம், மார்ச் 17: பிளஸ்-2 இயற்பியல் தேர்வில் பெரும்பாலான மாணவர்களுக்கு கடினமாக இருந்த கேள்விகளுக்கு அரசு சலுகை மதிப்பெண் கொடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே எழுந்துள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் மொழிப்பாடங்கள் முடிந்த நிலையில், இயற்பியல் பாடத்துக்கான தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், எதிர்பாராத வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். தேர்வறையில் இருந்து பெரும்பாலான மாணவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் வெளியே வந்ததைக் காண முடிந்தது. குறிப்பாக 10 மதிப்பெண் மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் பாடத்துக்கு வெளியில் இருந்து கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த கேள்விகளுக்கு அரசு சலுகை மதிப்பெண் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் அபிநயா, இந்துமதி, கோபிகாஸ்ரீ ஆகியோர் கூறியது:
பெரும்பாலான கேள்விகளை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை. கேள்வித்தாளைக் கண்டதுமே தேர்ச்சி பெறுவோமா என்ற அச்சம் ஏற்பட்டது. 10 மதிப்பெண் வினாக்கள் புத்தகத்தில் இல்லாதவையாக இருந்தன. ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண் வினாக்கள் மட்டுமே எளிதானதாக இருந்தன.
இதனால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்க நிர்ணயிக்கப்படும் தகுதி மதிப்பெண்ணை பெறுவோமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, இயற்பியல் தேர்வில் "கேட்கப்பட்ட', புத்தகத்தில் இல்லாத கேள்விகளுக்கு அரசு சலுகை மதிப்பெண் அளிக்கவேண்டும் என்றனர்.
இது குறித்து முதுநிலை இயற்பியல் ஆசிரியர் சங்கர் கூறியது:
மாணவர்கள் முதலில் 10 மதிப்பெண் வினாக்களுக்கு பதிலளிக்கவே எண்ணுகின்றனர். இயற்பியல் தேர்வில் 10 மதிப்பெண் வினாக்கள் அவை பரிச்சயமில்லாததுபோல் தோற்றம் அளித்ததால் அவர்கள் மனமுடைந்தனர். இதனால் பலரால் மேற்கொண்டு பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. பாடங்களைத் தேர்வு செய்து படித்தவர்களுக்கு இந்த வினாத்தாள் கடினம்தான்.
இருப்பினும் அனைத்துப் பாடங்களையும் படித்தவர்கள், அடிக்கடி மாதிரித் தேர்வு எழுதியவர்கள் முழு மதிப்பெண் (சென்டம்) பெற முடியும். அவர்களுக்கு கேள்விகளைப் புரிந்து கொள்ள மட்டும் அதிக நேரம் தேவைப்பட்டது.
சராசரியாக மாணவர்கள் எதை விலக்கி விட்டுப் படிப்பார்களோ அந்த வினாக்களே இடம் பெற்றிருந்தது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணா நகர் செழிப்பாக இல்லை: வாக்களித்த பிறகு விஷால் கருத்து

தாமரை எங்கும் மலரும்: பிரதமர் மோடி

மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

