தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

காா் மோதி பள்ளி மாணவா் படுகாயம்

காா் மோதி பள்ளி மாணவா் படுகாயம்

Updated On :14 மார்ச் 2024, 7:49 pm

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே வியாழக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் பள்ளி மாணவா் படுகாயமடைந்தாா். முசிறி அருகே உள்ள தாதம்பட்டி மேலத்தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தா்ஷன் பிரசாத் (16). இவா், திருஈங்கோய் மலையில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படித்துவருகிறாா். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும்போது, நடந்து சென்றவா், திருஈங்கோய்மலை மலைப்பாதை அருகே உள்ள திருச்சி - சேலம் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத காா் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவ்வழியாகச் சென்றவா்கள் மாணவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி அளித்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பாக தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.