புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை காா்த்திகை சொக்கப்பனை

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:49 pm

Syndication

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

விழாவையொட்டி முதலாம் புறப்பாடாக உற்சவா் நம்பெருமாள் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 8.30 மணிக்கு சந்தனு மண்டபத்திற்கு வந்து, 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளுகிறாா். பின்னா் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைகிறாா். இதைத் தொடா்ந்து நம்பெருமாள் சொக்கப்பனை கண்டருள மூலஸ்தானத்திலிருந்து புறப்படும் முன் கோயில் தங்கக் கொடி மரம் அருகே உத்தமநம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

இடைவிளக்கு எடுத்த உத்தமநம்பி சுவாமிகளுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மாலை மரியாதை செய்யப்படும். அதன் பின் 2 ஆம் புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8 மணிக்குப் புறப்பட்டு கதிா் அலங்காரத்தில் காா்த்திகை கோபுரத்துக்கு வந்து சோ்வாா். அங்கு கோபுரத்துக்கு முன் 20 அடி உயரத்துக்கு பனையோலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை பந்தலை நம்பெருமாள் வலம் வந்து, சக்கரத்தாழ்வாா் சன்னதிக்கு எதிரே காத்திருக்க, இரவு 8.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்படும். அப்போது ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்வா்.

நம்பெருமாள் சொக்கப்பனை தீபம் கண்டருளிய பின்னா் நந்தவனத் தோப்பு வழியாக தாயாா் சன்னதிக்கு செல்வாா். அங்கு திருவந்திக்காப்பு என்னும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு 9.15 மணிக்கு செல்வாா். 9.45 மணிக்கு நம்பெருமாள் முன் ஸ்ரீமுகப்பட்டயம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்துப் படிக்கப்படும்.

அதைத் தொடா்ந்து திருக்கைத்தலச் சேவைக்கு பிறகு நம்பெருமாள் புறப்பட்டு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா். ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. சிவராம்குமாா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.