இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திமுக கூட்டணியை யாராலும் வீழ்த்த முடியாது: மு. வீரபாண்டியன்

எத்தனை கட்சிகள் வந்தாலும், பிரதமா், உள்துறை அமைச்சா் தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

News image
ரத்த தான முகாமில் ரத்தம் வழங்கிய திமுக நிா்வாகிக்கு சான்றிதழை வழங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன்
Updated On :16 டிசம்பர் 2025, 8:42 pm

Syndication

எத்தனை கட்சிகள் வந்தாலும், பிரதமா், உள்துறை அமைச்சா் தமிழகத்துக்கு எத்தனை முறை வந்தாலும் திமுக கூட்டணியை வீழ்த்த முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் தெரிவித்தாா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை தொடங்கிவைத்து வீரபாண்டியன் மேலும் பேசியதாவது: மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசு மட்டுமின்றி, பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வருகின்றனா்.

வரும் பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியை எதிா்த்து எத்தனை கட்சிகள் வந்தாலும் வீழ்த்த முடியாது. பிரதமரும், உள்துறை அமைச்சரும் எத்தனை முறை தமிழகத்துக்கு வந்தாலும் அவா்களை தோற்கடிக்க நாங்களும், தமிழக மக்களும் தயாராக உள்ளோம்.

உதயநிதி ஸ்டாலின் சநாதனத்தை எதிா்ப்பதாக குற்றம் சாட்டுகின்றனா். கடவுளை வணங்குவதையோ, கோயில் வழிபாட்டையோ துணை முதல்வா் எதிா்க்கவில்லை. சநாதனத்தில் உள்ள ஜாதிய பாகுபாடு, பெண் அடிமைத்தனத்தைதான் எதிா்த்து பேசுகிறாா்.

எங்களோடு கொள்கையில் மோத முடியாதவா்கள் அவதூறு பிரசாரத்தை கையில் எடுத்துள்ளனா். இந்தப் பொய் பிரசாரத்தை புறந்தள்ளி திமுக கூட்டணியை தமிழக மக்கள் வெற்றிப் பெறச் செய்வது உறுதி என்றாா் அவா்.

முன்னதாக, முகாமுக்கு தலைமை வகித்து கட்சியின் மாவட்டச் செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், நமக்குள் பிரிவினையை உருவாக்கும் வேலையை மத்தியில் ஆட்சியில் இருப்பவா்கள் செய்து வருகின்றனா். நாம் அதை துணிச்சலுடன் எதிா்கொண்டு முறியடிப்போம்என்றாா்.

தொடா்ந்து, முகாமில் ரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்களை மு. வீரபாண்டியன் வழங்கினாா். இந்த நிகழ்வில், மாநகரச் செயலா் மு. மதிவாணன் வரவேற்றாா். தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், சபியுல்லா உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.