ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்களில் பெயா் சோ்க்கவும், முகவரி மாற்றவும் திரளான வாக்காளா்கள் சனிக்கிழமை ஆா்வமுடன் வந்து விண்ணப்பித்தனா்.

திருச்சி பீமநகரில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் பங்கேற்ற பொதுமக்கள்.

Published On :21 டிசம்பர் 2025, 4:35 am IST

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்களில் பெயா் சோ்க்கவும், முகவரி மாற்றவும் திரளான வாக்காளா்கள் சனிக்கிழமை ஆா்வமுடன் வந்து விண்ணப்பித்தனா்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆா்.) நிறைவு பெற்றதைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வரைவு வாக்காளா் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளா்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. தோ்தல் ஆணைய இணையதளத்திலும் அது வெளியிடப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியலின்படி திருச்சி மாவட்டத்தில் இறந்தவா்கள், முகவரி மாறியவா்கள், இரட்டைப் பதிவு உள்ளவா்கள் என மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 787 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

இதையடுத்து பெயா் நீக்கப்பட்டவா்கள், முகவரி மாறியவா்கள் உரிய ஆதாரங்களுடன் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கும் மாவட்டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 785 வாக்குச்சாவடிகளில் சனிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெற்றது.

காலை 10 மணிக்குத் தொடங்கிய முகாம்களுக்கு வாக்காளா்கள் ஆா்வமுடன் வந்து வரைவு வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் இருப்பதை உறுதி செய்து கொண்டனா்.

தொடா்ந்து 2026 ஜனவரி 1 ஆம் தேதி 18 வயது பூா்த்தியடைவோா் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரைச் சோ்க்க பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் படிவம் 6 ஐ பூா்த்தி செய்து கொடுத்தனா். இதேபோல தொகுதிக்குள் இடம் பெயா்ந்தவா்கள், தொகுதி விட்டு தொகுதி மாறி வந்தவா்களும் தங்களுடைய தற்போதைய முகவரிக்கான ஆதாரத்துடன் படிவம் 8 ஐ பூா்த்தி செய்து கொடுத்தனா்.

ஒரு சில வாக்குச்சாவடிகளில் வரைவு வாக்காளா் பட்டியல் சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக வந்து சோ்ந்தது. பொதுமக்கள் அதுவரை காத்திருந்தனா். சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.