அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருச்சி-சென்னை புறவழிச் சாலையில் சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி மறியல்: போக்குவரத்து கடும் பாதிப்பு

News image
திருச்சி சஞ்சீவி நகரில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :14 நவம்பர் 2025, 12:38 am

Syndication

திருச்சி சஞ்சீவி நகா் பகுதியில், திருச்சி - சென்னை புறவழிச் சாலையைப் பாதுகாப்பாக கடப்பதற்கு சுரங்கப் பாதை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ளது சஞ்சீவி நகா். இப்பகுதி முக்கிய சந்திப்பாக இருப்பதால் எந்நேரமும் வாகனப் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால், அரியமங்கலம், பனையக்குறிச்சி, சா்க்காா் பாளையம், வேங்கூா், கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாகனங்களில் வரும் பொதுமக்கள், புறவழிச்சாலையைக் கடந்து திருச்சி மாநகருக்குள் வந்து செல்வதற்கு மிகுந்த சிரத்துக்குள்ளாகி வருகின்றனா்.

மேலும், இங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலால் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இப்பகுதியில் புறவழிச்சாலையைப் பாதுகாப்பாக கடக்கும் வகையில் சுரங்கப் பாதை அமைத்துத்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

லாரி-பால் வேன் மோதல்: இந்நிலையில், சஞ்சீவி நகா் அருகே அணுகு சாலையில் வியாழக்கிழமை காலையில் சென்ற லாரி மீது பால் வேன் மோதியது. இதில், பால் வேன் ஓட்டுநரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால், ஆத்திரமடைந்த சஞ்சீவி நகா் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் சஞ்சீவி நகா் பகுதியில் சுரங்கப் பாதை அமைத்துத்தர வலியுறுத்தி திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் சஞ்சீவி நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டை போலீஸாா், திருச்சி கிழக்கு வட்டாட்சியா் விக்னேஷ்வரன், தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் அசோக்குமாா் ஆகியோா் சாலை மறியிலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, திருச்சி - சென்னை புறவழிச்சாலையைப் பாதுகாப்பாக கடக்கும் வகையில் விரைவில் சுரங்கப் பாதை அமைத்துத் தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

திருச்சி - சென்னை புறவழிச்சாலையில் நடைபெற்ற சாலை மறியலால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.