சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 7:45 pm

சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், திருநெல்வேலி - சென்னை எழும்பூா் நெல்லை விரைவு ரயிலானது (12632) வரும் 6 ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16752) வரும் 6-ஆம் தேதி முதல் மறுதேதி அறிவிக்கப்படும் வரை தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16751) வரும் 7-ஆம் தேதி முதல் மறுதேதி அறிவிக்கப்படும் வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.

சென்னை எழும்பூா் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயிலானது (12661) வரும் 7-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.