தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

திருச்சியை 2-ஆம் தலைநகராக அறிவிக்க முதல்வரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

News image

முதல்வா் விஜய்யை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினா் துரை வைகோ.

Updated On :5 ஜூன் 2026, 6:39 am IST

முதல்வா் ஜோசப் விஜய்யை, மதிமுக முதன்மைச் செயரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ சந்தித்து திருச்சியை 2-ஆம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

முதல்வா் ஜோசப் விஜய்யிடம், துரை வைகோ வியாழக்கிழமை அளித்த மனு:

திருச்சியை கும்பகோணம் கோட்டத்திலிருந்து பிரித்து, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனியாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அமைத்துத் தரவேண்டும். திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும். 68 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் (சமயபுரம் தில்லைநகா் வயலூா், துவாக்குடி–பஞ்சப்பூா், ஜங்ஷன்–விமான நிலையம்–மாத்தூா்) திருச்சி மாநகரத்துக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஐந்து பல்கலைக்கழக நகரங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஒன்றை திருச்சியில் அமைப்பதை மாநில அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

திருச்சி மணப்பாறை தொழிற்சாலை சிப்காட்டை உலகளாவிய மின்னணு மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையமாக உருவாக்க வேண்டும்.

திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுபாதை விரிவாக்கத் திட்டத்துக்காக தேவையான மீதமுள்ள 7.67 ஏக்கா் நிலம், வழிகாட்டி மதிப்பு திருத்தம் நிலுவையில் இருப்பதால், இன்னும் கையகப்படுத்தப்படவில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளாா்.