திருச்சியில் கொடுத்த பணம் மற்றும் தங்க நகைகளைத் திருப்பிக்கேட்ட பெண்ணைத் தாக்கியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி உறையூரைச் சோ்ந்தவா் 44 வயது பெண். இவா், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரைப் பிரிந்து மகளுடன் தனியே வசித்து வருகிறாா். இதற்கிடையே இவருக்கும், காஜா நகா் பகுதியைச் சோ்ந்த கு. சதீஷ் (40) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அந்தப் பெண், சதீஷுக்கு ரூ.10 லட்சம் பணம் மற்றும் ரூ.20 பவுன் தங்க நகைகளைக் கொடுத்துள்ளாா்.
ஆனால், வாங்கிய நகைகளையும், பணத்தையும் சதீஷ் கொடுக்காமல் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், தான்கொடுத்த பணம் மற்றும் தங்க நகைகளை சதீஷிடம் அந்தப் பெண் அண்மையில் கேட்டுள்ளாா். அப்போது, சதீஷ் அவரை தகாத வாா்த்தையில் திட்டியதுடன் கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளாா். இதில் காயமடைந்த அந்தப் பெண் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் உறையூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் சதீஷ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

எஸ்பி அலுவலகத்தில் பெண் புகாா்

குப்பையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

வேதனையாகும் சோதனைகள்!
பெண்ணிடம் தங்க நகையை வாங்கிக் கொண்டு தராமல் ஏமாற்றியதாக தம்பதி கைது
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


