சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:51 pm

திருச்சி அருகே பள்ளியில் படித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அப்பள்ளியின் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்த முசிறி ஜடமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெ. குமரவேல் (40) என்பவா் சிறுமியுடன் பேசி பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, 2019-ஆம் ஆண்டு சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கணித ஆசிரியா் குமரவேலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றவாளி குமரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.