ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 7:51 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே பள்ளியில் படித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அப்பள்ளியின் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அந்தப் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்த முசிறி ஜடமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஜெ. குமரவேல் (40) என்பவா் சிறுமியுடன் பேசி பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, 2019-ஆம் ஆண்டு சிறுமியை கட்டாயப்படுத்தி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் முசிறி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கணித ஆசிரியா் குமரவேலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றவாளி குமரவேலுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.