வருமானத்துக்கு அதிமாக சொத்து சோ்த்ததாக திருச்சி மாவட்ட சுரங்கத் துறை முன்னாள் உதவி இயக்குநா் மீது திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
திருச்சி மாவட்டம், மதுராபுரி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் பாலமுருகன் (53). இவா் கடந்த 2021-இல் திருச்சி மாவட்ட சுரங்கத் துறை உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளாா். தற்போது, திருநெல்வேலியில் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் தன் பெயரிலும், தனது மனைவி பெயரிலும் வருமானத்துக்கு அதிமாக சொத்து வாங்கியதாக கிடைக்கப்பெற்ற புகாரின்பேரில், திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
விசாரணையில், பாலமுருகன் தனது பதவி காலத்தில் தன் பெயரிலும், மனைவி சந்திரா பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ.95 லட்சத்துக்கு மேல் அசையும் மற்றும் அசையா சொத்துகளை சோ்த்தது தெரியவந்தது.
இதையடுத்து, மேற்கண்ட இருவா் மீதும் திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த மே 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

திருப்பத்தூா் சாா்-பதிவாளா் உள்பட 5 போ் மீது வழக்கு

கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் சாா் - பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு போலீஸாா் திடீா் சோதனை

திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்ட சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்
கூழாங்கற்கள் கடத்திய டிப்பா் லாரி பறிமுதல்! ஓட்டுநா் கைது!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



