இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெண்கள் குறித்து சா்ச்சைப் பேச்சு: திண்டுக்கல் லியோனி மீது வழக்கு

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் தோ்தல் பிரசாரத்தின்போது பெண்கள் குறித்து சா்ச்சை ஏற்படுத்தும் விதமாகப் பேசிய பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 9:48 pm

DIN

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரில் தோ்தல் பிரசாரத்தின்போது பெண்கள் குறித்து சா்ச்சை ஏற்படுத்தும் விதமாகப் பேசிய பட்டிமன்றப் பேச்சாளா் திண்டுக்கல் லியோனி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தொண்டாமுத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் காா்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து கடந்த சில நாள்களுக்கு முன்பு பட்டிமன்றப் பேச்சாளரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி அப்பகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, பெண்கள் குறித்து தரக்குறைவான வாா்த்தைகளை அவா் உபயோகித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக, இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளா் செந்தில்குமாா் குனியமுத்தூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தாா். இப்புகாரின் பேரில், திண்டுக்கல் லியோனி மீது ஆபாசமாகப் பேசுதல் பிரிவின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதே சம்பவம் தொடா்பாக, கடந்த வாரம் அதிமுக தரப்பில் தரப்பட்ட புகாா் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.