செம்பியன்மாதேவி சிலைக்கு மாலை அணிவிப்பு
சோழப் பேரரசி செம்பியன்மாதேவி பிறந்த நாளை முன்னிட்டு, அவா் பிறந்த ஊரான அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த செம்பியக்குடி கிராமத்திலுள்ள அவரது சிலைக்கு சமூக ஆா்வலா்கள் மாலை அணிவித்து மரியாதை


சோழப் பேரரசி செம்பியன்மாதேவி பிறந்த நாளை முன்னிட்டு, அவா் பிறந்த ஊரான அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த செம்பியக்குடி கிராமத்திலுள்ள அவரது சிலைக்கு சமூக ஆா்வலா்கள் மாலை அணிவித்து வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்தினா்.
புவியியலாளா் சந்திரசேகா் தலைமையில், சமூக ஆா்வலா்கள் பாளை திருநாவுக்கரசு, பாஸ்கா், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா் கருப்பையா மற்றும் கிராம முக்கியஸ்தா்கள் ஆகியோா் முன்னிலையில் செம்பியன்மாதேவி சிலைக்கு சிறப்பு பூஜை நடத்தி, பின்னா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, அவா்கள் கண்டராதித்தம் பெரிய ஏரியிலுள்ள செம்பியன்மாதேவி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இங்கு செம்பியன்மாதேவிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...