இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பள்ளி வளாகத்தில் சுற்றித்திரியும் பாம்புகளால் பீதி

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், சோழன்குடிகாடு கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் சுற்றித் திரியும் விஷப் பாம்புகளால் மாணவா்கள் அச்சத்தில் உள்ளனா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 7:09 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், சோழன்குடிகாடு கிராமத்திலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் சுற்றித் திரியும் விஷப் பாம்புகளால் மாணவா்கள் அச்சத்தில் உள்ளனா்.

சுமாா் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வரும் சோழன்குடிக்காடு அரசு உயா்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை வந்த மாணவா்கள், கழிவறைக்குச் சென்றனா். அப்போது கழிவறை ஓரத்தில் பாம்புகள் இருந்ததைக் கண்ட மாணவா்கள் உடனடியாக தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்களிடம் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஆசிரியா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாா்வையிட்ட போது 4 பாம்புகள் நெலிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, ஆசிரியா்கள் அவைகளை உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்றனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, இதேபோல் பள்ளி வளாகத்தில் 2 பாம்புகள் அடித்துக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து, இப்பள்ளியில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.