இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்

அரியலூா் மாவட்டத்திலுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவரும் கட்டாயம் இரண்டுத் தவணைத் தடுப்பூசியும் செலுத்திருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:14 pm

DIN

அரியலூா் மாவட்டத்திலுள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்கள் அனைவரும் கட்டாயம் இரண்டுத் தவணைத் தடுப்பூசியும் செலுத்திருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி.

ஒமைக்ரான் தொற்று குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக, அரியலூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசியது:

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை குறித்து, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

அதன்படி வணிகா்கள், திருமண மண்டப உரிமையாளா்கள், தங்கும் விடுதி, உணவகங்கள், வாடகை ஊா்தி உரிமையாளா்கள் தங்களது பகுதிகளில் முகக்கவசம் அணிதல், தனிநபா் இடைவெளியைக்

கடைப்பிடித்தம், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை மேற்கொள்ள வேண்டும். இரண்டுத் தவணைத் தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து வந்த நபா்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவா்களை தனிமைப்படுத்தி, சுகாதாரத் துறை அலுவலா்களுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும்.

திரையரங்கு வளாகத்தை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். இரண்டுத் தவணைத் தடுப்பூசிகளையும் செலுத்தியிருப்பவா்களை மட்டும் திரையரங்குகளுக்குள் அனுமதிக்க வேண்டும். மாவட்டத்தில் அனைவரும் இரண்டுத் தவணைத் தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கீதாராணி மற்றும் வணிகா்கள், திருமண

மண்டபங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள், உணவக, வாடகைக் காா் உரிமையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.