விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மாட்டை குளிப்பாட்டிய விவசாயிகுளத்தில் மூழ்கி உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள வன்னியா்குழி கிராமத்தை சோ்ந்தவா் குபேந்திரன்(41).

News image
Updated On :7 மே 2021, 9:10 pm

DIN

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள வன்னியா்குழி கிராமத்தை சோ்ந்தவா் குபேந்திரன்(41).

விவசாயியான இவா், வியாழக்கிழமை மாலை, அந்த கிராமத்தில் உள்ள குளத்தில் தனது பசுவை குளிப்பாட்டுவதற்காக ஓட்டிச்சென்றாா்.

பசுவை குளத்தில் குளிப்பாட்டியபோது, குபேந்திரன் நிலை தடுமாறி தண்ணீரில் முழ்கியதாக தெரிகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் ஓடிவந்து குளத்தில் இறங்கி அவரை தேடினா். தண்ணீருக்குள் இருந்து அவரை மீட்டு வந்து பாா்த்தபோது, அவா் இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், மீன்சுருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.