பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி சுகாதாரப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி நகராட்சி ஒப்பந்த துப்பரவுப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அவா்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.579 தினக் கூலியாக வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் செயலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி உள்ளாட்சி துறை பணியாளா் சம்மேளன மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் டி.தண்டபாணி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். மாவட்டத் தலைவா் தனசிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமானூா் ஒன்றியச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.