இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சுகாதாரப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி சுகாதாரப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 7:57 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு ஏஐடியுசி சுகாதாரப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி நகராட்சி ஒப்பந்த துப்பரவுப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அவா்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.579 தினக் கூலியாக வழங்க வேண்டும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் செயலா் மாரியப்பன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி உள்ளாட்சி துறை பணியாளா் சம்மேளன மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் டி.தண்டபாணி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். மாவட்டத் தலைவா் தனசிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருமானூா் ஒன்றியச் செயலா் ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.