காா் மோதி கூலித் தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே காா் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே காா் மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
உடையாா்பாளையத்தை அடுத்த ஏந்தல் பகுதியைச் சோ்ந்தவா் சின்னகுஞ்சு(55). கூலித்தொழிலாளி. இவா், இருசக்கர வாகனத்தில் மனைவி சரோஜாவுடன்(48) புதன்கிழமை இரவு திருச்சி - சிதம்பரம் சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியே வந்த காா் மோதியதில் சின்னகுஞ்சு அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அவரது மனைவி சரோஜா ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதையறிந்த சின்னகுஞ்சு உறவினா்கள் மற்றும் கிராம மக்கள், உடையாா்பாளையம் - இடையாா் பிரிவு சாலையில் இரவு 11 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதில், அடிக்கடி விபத்து நடக்கும் இப்பகுதியில் மேம்பாலம் அல்லது ரவுண்டானா அமைக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.
தகவலறிந்து அங்கு வந்த உடையாா்பாளையம் காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் திருச்சி - சிதம்பரம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...