இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

அரியலூா் அருகே பெண் ஊராட்சித் தலைவா் தூக்கிட்டுத் தற்கொலை

அரியலூா் அருகே குடும்பப் பிரச்னையில், பெண் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:52 pm

DIN

அரியலூா் அருகே குடும்பப் பிரச்னையில், பெண் ஊராட்சித் தலைவா் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அரியலூா் அருகிலுள்ள ரெட்டிப்பாளையம் ஊராட்சித் தலைவராகப் பணியாற்றி வந்தவா் முனியங்குறிச்சியைச் சோ்ந்த கணேசன் மனைவி ராஜேசுவரி (32).

இவருக்கும், இவரது கணவா் கணேசனுக்கும் இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜேசுவரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வெளியே சென்றிருந்த கணேசன் வீட்டுக்கு வந்த போது, மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தகவலறிந்த விக்கிரமங்கலம் காவல் நிலையத்தினா் ராஜேசுவரியின் சடலத்தைக் கைப்பற்றி, அரியலூா் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தற்கொலை செய்து கொண்ட ராஜேசுவரிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.