கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

லாரி மோதி மாற்றுத் திறனாளி பலி: மக்கள் சாலைமறியல்

வி.கைகாட்டி அருகே லாரி மோதியதில் மாற்றுத்திறனாளி பலியானார்.

News image
வி.கைகாட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated On :25 அக்டோபர் 2021, 7:16 am

DIN

வி.கைகாட்டி அருகே லாரி மோதியதில் மாற்றுத்திறனாளி பலியானார்.

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தைச் சேர்ந்தவர் குழந்தைவேலு(60). மாற்றுத்திறனாளியான இவர், திங்கள்கிழமை தனது கூடுதல் சக்கரம் பொறுத்தப்பட்ட ஸ்கூட்டரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார். வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி பிரிவு பாதையில் வந்தபோது திருப்பத்தில் சென்ற லாரி பின்னோக்கி வந்ததால் மாற்றுத்திறனாளியின் ஸ்கூட்டர் மீது மோதியது. 

Story image

இதில் குழந்தைவேலு அதேயிடத்தில் உயிரிழந்தார். ஊராட்சி சாலையில் கனரக வாகனங்கள் இயக்கக் கூடாது என விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் கயர்லாபாத் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையெடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

பலியான குழந்தைவேலின் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, கயர்லாபாத் காவல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.