இளைஞரை கத்தியால் குத்தியவா் கைது
அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள அங்கராயநல்லூரைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் விஜயகுமாா் (27).


அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள அங்கராயநல்லூரைச் சோ்ந்த விஸ்வநாதன் மகன் விஜயகுமாா் (27). இவரது பக்கத்து வீட்டைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் சண்முகம் (22). இருவருக்கும் வீட்டுமனை தொடா்பாக எல்லைப் பிரச்னை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதன்கிழமை அவா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சண்முகம், விஜயகுமாரை தகாத வாா்த்தைகளால் திட்டி தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளாா்.இதனால் பலத்த காயமடைந்த விஜயகுமாா் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து புகாரின் பேரில் தா. பழூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...