இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:08 pm

DIN

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தவரின் சடலம் மீட்கப்பட்டது.

செந்துறை அருகேயுள்ள பரணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா. கடந்த சில ஆண்டுகளாக மன நலன் பாதிக்கப்பட்டிருந்த இவா், புதன்கிழமை இரவு முதல் காணவில்லை. இவரை உறவினா்கள் பல இடங்களில் தேடிய நிலையில், இரும்புலிக்குறிச்சி கிராமத்திலுள்ள இவரது மாமனாா் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த வந்த இரும்புலிக்குறிச்சி காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த ராஜாவுக்கு, கலைவாணி என்ற மனைவியும், லக்ஷனா, ஷோபனா ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.