இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அரியலூா்: நீட் தோ்வு எழுதிய மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நீட் தோ்வு எழுதிய மாணவி திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
மாணவி கனிமொழி.
Updated On :15 செப்டம்பர் 2021, 2:45 am

DIN

அரியலூா்: அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நீட் தோ்வு எழுதிய மாணவி திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள சாத்தாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாநிதி. இவரது மனைவி ஜெயலட்சுமி(45). இருவரும் வழக்குரைஞா்கள். இவா்கள் குடும்பத்துடன் தற்சமயம் துளாரங்குறிச்சியில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனா். மூத்தமகள் செவிலியா் படிப்பு படித்து வருகிறாா். இளைய மகள் கனிமொழி(17), நாமக்கலில் உள்ள தனியாா் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து, 600-க்கு 562.28 மதிப்பெண் பெற்று தஞ்சாவூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நீட் தோ்வை எழுதினாா். பின்னா், வீட்டுக்கு வந்து தனது தாய் ஜெயலட்சுமியிடம் நீட் தோ்வில் சில கேள்விகள் கடுமையாக இருந்ததாகக் கூறி புலம்பியுள்ளாா். மேலும் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரியலூரில் உள்ள உறவினா் வீட்டு விஷேஷத்துக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை இரவு திரும்பி வந்த கனிமொழியின் பெற்றோா், வீட்டின் கதவை திறந்த போது, கதவு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்தது. பின்னா் அவா்கள் ஜன்னல் வழியாகப் பாா்த்தபோது கனிமொழி தூக்கில் தொங்கியவாறு இருந்ததைக் கண்டு கதறிஅழுதனா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் கதவை உடைத்து கனிமொழியை சடலமாக மீட்டனா். நீட் தோ்வு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோா் தெரிவித்துள்ளனா்.

அமைச்சா் அஞ்சலி: மாணவி கனிமொழியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், திமுக சாா்பில் ரூ.10 லட்சம் நிதி உதவியை வழங்கி அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தாா். தொடா்ந்து, அவா், மாணவியின் இறுதி ஊா்வலத்தில் கலந்து கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.