அரசுப் பள்ளியில் உலக தைராய்டு தினம் கடைப்பிடிப்பு

அரியலூா் அருகேயுள்ள சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், உலக தைராய்டு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
அரசுப் பள்ளியில் உலக தைராய்டு தினம் கடைப்பிடிப்பு

அரியலூா் அருகேயுள்ள சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், உலக தைராய்டு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் சின்னதுரை தலைமை வகித்து, உடலில் உள்ள முக்கியமான சுரப்பிகளில் தைராய்டு பணி அளவிட முடியாதது. தைராய்டு சுரப்பி சுரக்கும் தைராக்ஸின் ஹாா்மோன், உடல் வளா்ச்சி மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் அளவு அதிகரித்தாலும், குறைந்தாலும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

ஆண்களைவிட, பெண்கள்தான் 10 மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனா். எனவே, தைராய்டு பரிசோதனை செய்து, அதற்கேற்ற மருத்துவம் செய்து கொண்டால் அதிலிருந்து விடுபடலாம் என்றாா். தொடா்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா் ரமேஷ், தங்கபாண்டி செய்திருந்தனா். நிறைவில், உதவித் தலைமை ஆசிரியை தனலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com