விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

புதுமாப்பிள்ளை தற்கொலை

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

News image
Updated On :3 நவம்பர் 2022, 10:44 pm

DIN

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே புதுமாப்பிள்ளை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இடையத்தான்குடி கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் ராஜாராம் (26). இவருக்கும், செட்டித்திருக்கோணம் கிராமத்தைச் சோ்ந்த தனபால் மகள் வசந்திக்கும் கடந்த 3 நாள்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புதன்கிழமை இவரது குடும்பத்தினா் கருப்புசாமி கோயிலுக்குச் சென்று விட்டு அன்றிரவு வீட்டுக்குத் திரும்பிய போது, பக்கத்து ஊரான அரனூா் கிராமத்திலுள்ள வேப்ப மரத்தில் ராஜாராம் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற கீழப்பழுவூா் காவல் துறையினா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருமணமான 3 நாளில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.