விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பெட்டிக்கடைக்கு தீ வைத்த முதியவரை தேடும் போலீஸாா்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் பெட்டிக் கடைக்கு தீ வைத்த முதியவரை போலீஸாா் தேடுகின்றனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:24 pm

DIN

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் பெட்டிக் கடைக்கு தீ வைத்த முதியவரை போலீஸாா் தேடுகின்றனா்.

கீழப்பழுவூரைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (50). இவா் அரியலூா் பிராதானச் சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளாா். இந்நிலையில், கடந்த 2 ஆம் தேதி இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியனுக்கும் (65) தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பெட்டிக் கடையை கலியபெருமாள் மூடிச் சென்ற நிலையில், அன்று மாலை அந்தக் கடை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த அரியலூா் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். இதுகுறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது பெட்டிக்கடைக்கு தீவைத்தது சுப்பிரமணியன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைத் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.