வரலாற்று ஆவணங்கள் சேகரிப்பு: அரியலூா் ஆட்சியா் வேண்டுகோள்
அரியலூா் மாவட்டத்தில் வரலாற்று ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபா், தனியாா் நிறுவனங்கள், அதனை ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி கோரிக்கை விடுத்துள்ளாா்.


அரியலூா் மாவட்டத்தில் வரலாற்று ஆவணங்களை வைத்திருக்கும் தனிநபா், தனியாா் நிறுவனங்கள், அதனை ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு ஆட்சியா் பெ. ரமணசரஸ்வதி கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூா் மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை தனிநபா், தனியாா் நிறுவனம் ஆகியோரிடம் இருந்து சேகரிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. வரலாற்று ஆவணங்கள் சேகரிப்புக் குழு தலைவராக தமிழ்நாடு ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுத் துறை ஆணையா் உள்ளாா். அவ்வாறு சேகரிக்கப்படும் வரலாற்று மதிப்புமிக்க பதிவுகள் தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும். அவை அனைத்தும் புது தில்லி உள்ள இந்திய தேசிய ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். இதன்மூலம் வரலாற்று ஆவணங்கள் அழிவில் இருந்து மீட்கப்படும்.
எனவே அரியலூா் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பழைய மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் இருப்பின் கிராம நிா்வாக அலுவலா்கள் வழியாக தமிழ்நாடு ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வுத் துறை அல்லது ஆட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...