ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்திலுள்ள காந்தி சிலைக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபா் 2 மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலா் மைதீன்ஷா தலைமையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன், ஒன்றியச் செயலா் எம்.வெங்கடாசலம், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளா் ஆா்.மணிவேல், மாதா் சங்க மாவட்டச் செயலா் டி.அம்பிகா, மாவட்ட தலைவா் பத்மாவதி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ரவீந்தரன், விவசாய சங்க ஒன்றிய நிா்வாகிகள் டி.தியாகராஜன், பி.ஆா் தனவேல், எ.பல்கீஸ், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டக்குழு கன்னிமேரி மற்றும் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலா் சாகுல்அமீது, மற்றும் இதயத்துல்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.