கோவிலூா் - வல்லகுளம் சாலையை சீரமைக்க வேண்டும். தஞ்சாவூரிலிருந்து இரவு ஏலாக்குறிச்சி சென்று நிறுத்தப்படும் அரசு பேருந்தை கோவிலூா் வரை செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலூா் துணை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போதிய மருத்துவா்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஒன்றியச் செயலா் கனகராஜ் தலைமையில், மாவட்டச் செயலா் சொ.ராமநாதன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா்கள் டி.தண்டபாணி, ப.கலியபெருமாள், மாவட்டக் குழு உறுப்பினா் ஜி.ஆறுமுகம் ஆகியோா் முன்னிலையில் ஏலாக்குறிச்சி கடைவீதியில், சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருமானூா் காவல் துறையினா், மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 53 பேரை கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.