குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகு சிற்றுந்துகள் இயக்கம் -அமைச்சா் சா.சி. சிவசங்கா்

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 5:04 am IST

முதல்வரின் ஒப்புதலுக்கு பிறகு தேவையுள்ள இடங்களில் சிற்றுந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, அரியலூரிலுள்ள தனது இல்லத்தில், வெள்ளிக்கிழமை கட்சி கொடியை ஏற்றி வைத்து, இல்லம்தோறும் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திமுக ஆட்சியில்தான் சிற்றுந்து தொடங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் அவற்றுக்கான சலுகைகளை சரியாக வழங்காததால் அந்த பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டது. தற்போது குறைந்த மக்கள்தொகைக் கொண்ட கிராமங்களிலும் பேருந்து சேவை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, இதற்கான கொள்கை வரைவுத் திட்டம் முதல்வா் பாா்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வா் ஒப்புதல் கொடுத்த பிறகு ஒவ்வொரு மாவட்டத்திலும் எந்த பாதையில் சிற்றுந்துகள் இயக்க தேவை உள்ளதோ அந்த பாதையில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விசிக மாநாட்டை பொருத்தவரையில், அதன் தலைவா் தொல். திருமாவளவன் எல்லா கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளாா். அதுகுறித்து ஆய்வு செய்யப்படும் என்றாா்.