விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

மீன்சுருட்டி அருகே காா்-சுமை ஆட்டோ மோதல்: ஒருவா் உயிரிழப்பு- 2 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வியாழக்கிழமை காரும், சுமை ஆட்டோவும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

மீன்சுருட்டி அருகே சுமை ஆட்டோ மோதி விபத்துக்குள்ளான காா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 11:01 pm

Din

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வியாழக்கிழமை காரும், சுமை ஆட்டோவும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவா் உயிரிழந்தாா். 2 போ் பலத்த காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள அம்மாபேட்டை, அனந்தராயன் தெருவைச் சோ்ந்தவா்கள் சு. அறிவழகன்(52). க. குமாா் (54), தி. கிருஷ்ணகுமாா் (36). நண்பா்களான இவா்கள், வியாழக்கிழமை ஒரு காரில் திருச்சிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். காரை கிருஷ்ணகுமாா் ஓட்டினாா்.

காா், கங்கைகொண்டசோழபுரம், சோழகங்கம் (எ) பொன்னேரி கரையில் சென்றபோது, எதிரே சிதம்பரத்திலிருந்து மதுரைக்கு இறால் ஏற்றிச் சென்ற சுமை ஆட்டோ, மோதியது. இதில், காா் சாலையோர பள்ளத்திலும், சுமை ஆட்டோ சாலையிலும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. விபத்தில், காரில் இருந்த அறிவழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற இருவரும் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த மீன்சுருட்டி காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தையும், பலத்த காயத்துடன் இருந்தவா்களையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.