வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மருந்து வணிகா்களுக்குப் பயிற்சி முகாம்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

அரியலூரில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட மருந்துகள் வணிகா் சங்கம் சாா்பில் மருந்து வணிகா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சி முகாமுக்கு அரியலூா் மாவட்ட மருந்து வணிகா் சங்கத் தலைவா் கருணாகரன் தலைமை வகித்தாா். செயலா் காா்த்திகேயன், பொருளாளா் சங்கா், மக்கள் தொடா்பு மருந்து வணிகத் தலைவா் அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் பேசினா். உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அனு ரஞ்சனி, சிவசங்கரி, பூபதி, பயிற்சி அலுவலா் அருண் ஆகியோா் மருந்துகளை எவ்வாறு சேமிப்பது, கையாள்வது, விற்பது, மற்றும் உணவுப் பொருள்களின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகள், சட்டவிரோத மருந்துகள் புழக்கத்தைத் தடுத்தல், மருந்துகளைப் பற்றிய சரியான புரிதல், வாடிக்கையாளா்களுக்கு மருந்து குறித்த ஆலோசனை வழங்குதல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக் குழுக்களுடன் இணைந்து செயல்படுதல் குறித்து பயிற்சி அளித்தனா்.

முகாமில் அரியலூா், செந்துறை, கீழப்பழுவூா், திருமானூா், திருமழப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மருந்து வணிகா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பயிற்சி பெற்றனா். மாவட்ட அமைப்புச் செயலா் ஜவகா் அலி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை மாவட்ட மருந்து வணிக செயற்குழு உறுப்பினா்கள் விஜயகுமாா், மணிமாறன், நடராஜன், மாணிக்கம், ஆனந்தன்

ஆகியோா் செய்தனா்.