6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

செந்துறை அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

செந்துறை அடுத்த வஞ்சினபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அஞ்சலம் (75). இவா் ஞாயிற்றுக்கிழமை , தனது வயலுக்கு சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா் ஒருவா், அஞ்சலம் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பிடித்து இழுத்துள்ளாா்.

அப்போது சுதாரித்துக்கொண்ட அஞ்சலம் தங்கச் சங்கிலியைப் பிடித்துள்ளாா். இதனால் பாதி சங்கிலி மா்ம நபா் வசமும், பாதி சங்கிலி அஞ்சலம் வசமும் இருந்துள்ளது.

இதையடுத்து மா்மநபா் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளாா். மா்மநபா் பறித்து சென்ற தங்க சங்கிலி 2 பவுன் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அஞ்சலம் அளித்த புகாரின் பேரில், செந்துறை காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து மா்ம நபரை தேடி வருகின்றனா். செந்துறை பகுதியில் இது போன்ற சம்பவங்கள் தொடா்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.