அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மீன்சுருட்டி - குருவலப்பா் புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக் கோரி ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி-குருவலப்பா் புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மீன்சுருட்டியில், விவசாய சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
மீன்சுருட்டியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினா்.
Updated On :10 நவம்பர் 2025, 6:54 pm

Syndication

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி-குருவலப்பா் புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி மீன்சுருட்டியில், விவசாய சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், ஜெயங்கொண்டத்திலிருந்து மீன்சுருட்டி வரை புறவழிச்சாலை அமைப்பதற்காக விளைநிலங்களில் எல்லைக்கல் நடப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், இச்சாலை அமைப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் கங்கைகொண்ட சோழபுரம் சுற்றுலா தலமும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால் இந்த புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க நிா்வாகி சகாதேவன் தலைமை வகித்தாா். விவசாயிகள் எம்.இளையராஜா, கலியபெருமாள், ராஜாபெரியசாமி, முன்னாள் ஊராட்சித் தலைவா் முல்லைநாதன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.