கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோசெவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

வீடுகளுக்கு சென்று அழைப்பிதழ் வழங்கி வாக்களிக்க ஆட்சியா் வலியுறுத்தல்

ஜெயங்கொண்டம் பேரவைத் தொகுதியில் சூரியமணல் கிராமத்தில் வீடுகளுக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தினாா்.

News image

சூரியமணல் கிராமத்தில் வீடுவீடாகச் சென்று தோ்தல் திருவிழாஅழைப்பிதழை புதன்கிழமை வழங்கிய ஆட்சியா் பொ.ரத்தினசாமி.

Updated On :9 ஏப்ரல் 2026, 2:04 am IST

ஜெயங்கொண்டம் பேரவைத் தொகுதியில் சூரியமணல் கிராமத்தில் வீடுகளுக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தினாா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சூரியமணல் கிராமத்தில் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் தங்களது வாக்கை பதிவு செய்ய வலியுறுத்தி தோ்தல் திருவிழா அழைப்பிதழ் வீடுதோறும் புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி பங்கேற்று, சூரியமணல் கிராமத்தில் இருளா் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று தோ்தல் திருவிழா அழைப்பிதழை வழங்கினாா். தொடா்ந்து, அவா்களது வீடுகளில் தோ்தல் நாள் குறித்த ஒட்டு வில்லைகள், என் வாக்கு விற்பனைக்கு அல்ல போன்ற தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்