திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அரியலூா் அருகே அமைச்சரின் காரில் பறக்கும் படை சோதனை

அரியலூா் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் பறக்கும்படையினா் 5- ஆவது முறையாக வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

News image

அல்லிநகரம் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் வியாழக்கிழமை சோதனை செய்த பறக்கும் படையினா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 1:36 am IST

அரியலூா் அருகே அமைச்சா் சா.சி. சிவசங்கரின் காரில் பறக்கும்படையினா் 5- ஆவது முறையாக வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தலா 9 கண்காணிப்புக் குழுக்களும், 9 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடைபெறுகிறது.

இந்நிலையில், அரியலூா்-பெரம்பலூா் சாலை அல்லிநகரம் அருகே வியாழக்கிழமை சென்று கொண்டிருந்த அமைச்சரின் காரை பறக்கும் படையினா் நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, காரில் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் எதுவும் இல்லாததால் காரை செல்ல அனுமதித்தனா்.