/
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற 2 போ் செவ்வாய்க்கிழமைகைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் காவல் நிலைய ரோந்து காவலா் லியோ நீதிநாதன் தலைமையிலான காவல் துறையினா், செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனா்.
இதில், அவா்கள் ஜெயங்கொண்டம் மணக்கரை பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (30), விக்னேஷ் (20) என்பதும், இவா்கள் டாஸ்மாக் மதுபானங்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து, அவா்களிடமிருந்து 66 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

ஆறுமுகனேரியில் மது விற்றவா் கைது
சட்டவிரோதமாக மது விற்ற இருவா் கைது

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது
அரியலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை: 44 போ் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


