தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வாக்குச்சாவடிமறு சீரமைப்பு கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :12 மே 2013, 6:18 am IST

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளையும், நகரப் பகுதிகளில் 1,400 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளையும், 2  கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் வாக்காளர்கள் சென்று வாக்களிக்கும் வாக்குச் சாவடிகளையும் கண்டறிந்து சீரமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் அதிமுக மாவட்டப் பொருளாளர் பி.கே.எஸ். முரளி, நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், திமுக மாவட்டப் பொருளாளர் ஆர். ராமசாமி, வழக்குரைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ம. லட்சுமணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன், எம். சின்னையன், பாஜக மாவட்டத் தலைவர் கே. சிவசாமி, கரூர், குளித்தலை கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.