தீபாவளி பண்டிகை: கரூர் உழவர் சந்தையில் ஒரே நாளில் 22,890 கிலோ காய்கறிகள் விற்பனை
தீபாவளி பண்டிகை நாளன்று கரூர் உழவர் சந்தையில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 22,890 கிலோ காய்கறிகள் விற்பனையானது.


தீபாவளி பண்டிகை நாளன்று கரூர் உழவர் சந்தையில் ரூ.9 லட்சம் மதிப்பிலான 22,890 கிலோ காய்கறிகள் விற்பனையானது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் உழவர் சந்தையில் புதன்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் வழக்கத்தை விட காய்கறி விற்பனையும் அதிகரித்தது. தக்காளி கிலோ ரூ.45, சின்னவெங்காயம் ரூ.70, 80, பீன்ஸ் ரூ.65, கேரட் ரூ.50 என விற்பனையானது.
இதுதொடர்பாக சந்தை மேற்பார்வை அதிகாரி கூறுகையில், வழக்கத்தை விட தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் அதிகளவில் வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். நுகர்வோர் சுமார் 4,000 பேர் காய்கறிகளை வாங்கினர். 143 விவசாயிகள் எடைபோட்டு காய்கறி வியாபாரம் செய்தனர். இங்கு புதன்கிழமை மட்டும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள சுமார் 22,890 கிலோ காய்கறிகள் விற்றுத் தீர்ந்தன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...