இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

மானுடவியல் குழு பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்

தேவேந்திரகுல வேளாளர் மானுடவியல் குழு ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 9:21 am IST

தேவேந்திரகுல வேளாளர் மானுடவியல் குழு ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் பரிந்துரைக்க வேண்டும் என்று மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகனிடம்  அனைத்துக் கட்சியிலுள்ள  தேவேந்திரகுல வேளாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது: தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையான பட்டியல் வகுப்பில் உள்ள 7 உள்பிரிவுகளை இணைத்து, தேவேந்திரகுல வேளாளர் எனப் பெயர் திருத்தம் செய்யக் கோரி போராடி வருகிறோம்.
 அண்மையில் தேவேந்திரகுல வேளாளர் என பெயர் திருத்தத்திற்கான மானுடவியல் ஆய்வறிக்கையை மாநில அரசிடம் சென்னைப்  பல்கலைக்கழக மானுடவியல் துறை சமர்ப்பித்துள்ளது.  இதை உடனடியாக மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும்.
இந்து மக்கள் கட்சி : கிருஷ்ணராயபுரம் அடுத்த முனையனூர் சமத்துவபுரத்தில் 45 குடும்பங்கள் வசிக்கின்றன.  குடிநீர், தார்ச்சாலை, மின்வசதி மற்றும் பயணிகள் நிழற்குடை இல்லை. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் தெரிவித்தும் அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை. எனவே உடனடியாக வசதிகளை செய்துதர வேண்டும்.
நெடுங்கூர், ஆரியூர், க.பரமத்தி  கிராம மக்கள் : அரவக்குறிச்சி அருகே நெடுங்கூரில் இரும்புக்கம்பி தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.  இத்தொழிற்சாலை அமைந்தால்  கொதிநீரால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கும் நிலை உள்ளது.  அதிகளவில் ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர் உறிஞ்சப்படும் என்பதால் குடிநீர்த் தட்டுப்பாடும் ஏற்படும்.  கிராம மக்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளும் ஏற்படும் என்பதால் தொழிற்சாலை அமையாதவகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.