மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் அல்ல

மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் அல்ல என்றார் குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி அகிலா ஷாலினி.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:45 am

DIN

மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் அல்ல என்றார் குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி அகிலா ஷாலினி.
குளித்தலை வட்டச் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்   குளித்தலை கிளைச்  சிறைச்சாலையில் புதன்கிழமை நடைபெற்ற சட்ட உதவி முகாமுக்குத் தலைமை வகித்து, அவர் மேலும் பேசியது:
மக்களுக்காகத்தான் சட்டம், சட்டத்துக்காக மக்கள் அல்ல.  எனவே ஒவ்வொரு தனி மனிதனுக்கும் சட்டம் பாதுகாப்பு அளிக்கும். இதை உறுதிப்படுத்தவே  வட்டம், மாவட்ட, மாநில, தேசிய அளவில் இலவச சட்டஉதவி முகாம்களை உச்ச நீதிமன்றம் மாதந்தோறும் நடத்தி வருகிறது. இதனால் தனி மனிதனின் நீதி மறுக்கப்படுவது தடுக்கப்படுகிறது.  
எனவே நீண்டகாலமாக விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ளவர்கள் இலவச சட்ட  உதவி முகாமை நாடினால் அவர்களுக்கு வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்து இலவசமாக வாதாடி நீதி கிடைக்க  ஏற்பாடு செய்யப்படுகிறது.
தற்போது சமுதாயத்தில் ஆதாயக் கொலைகள் அதிகரித்துவிட்டன. 
இக்கொலைகளுக்கு அதிகபட்சமாக தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. எனவே சிறையில் உள்ள அனைவரும்  சிறைச்சாலையை சீர்திருத்த இடமாகக் கருதி, மீண்டும் தவறு செய்யாமல் திருந்தி வாழ வேண்டும் என்றார்.
வழக்குரைஞர் சங்கத் தலைவர் சாகுல் ஹமீது, செயலர்  மனோகரன், துணைத் தலைவர் மருதமுத்து, முன்னாள் அரசு வழக்குரைஞர் நாகராஜன், வழக்குரைஞர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.