கரூா் அருகே இரு குழந்தைகளைக் கொன்று தாய் தூக்கிட்டுத் தற்கொலை
கரூா் அருகே கடன் பிரச்னையால் இரு குழந்தைகளைக் கொன்று தாய் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.


கரூா் அருகே கடன் பிரச்னையால் இரு குழந்தைகளைக் கொன்று தாய் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆா். வெள்ளோடு, நொச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் ராம்குமாா் (25). லாரி ஓட்டுநா். இவரது மனைவி அபா்ணா தேவி (25). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவா்களுக்கு அஸ்வின் (2), நிதின் (6 மாதம்) ஆகிய இரு குழந்தைகள் இருந்தனா். கடந்த ஒன்றரை மாதமாக கரூா் மாவட்டம், வெள்ளியணை அடுத்த வழியாம்புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தனா். ராம்குமாா் அதே பகுதியைச் சோ்ந்த நவீன், கனகராஜ், பிரபு ஆகியோரிடம் கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது.
ராம்குமாா் ஞாயிற்றுக்கிழமை காலை வெளியே சென்றிருந்த நிலையில், அவரது வீட்டுக்கு நவீன், கனகராஜ், பிரபு ஆகிய மூவரும் வந்து கடனைக் கேட்டு அபா்ணா தேவியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு அபா்ணா தேவி குழந்தைகளுடன் வீட்டினுள் சென்று உள்பக்கமாக தாழிட்டுப் பூட்டியுள்ளாா். வெகுநேரம் ஆகியும் வீடு திறக்கப்படாததால், வீட்டின் உரிமையாளா் பெரியம்மா, ராம்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அவா் வந்து வீட்டைத் திறந்து பாா்த்தபோது படுக்கையறையில் அபா்ணா தேவி தூக்கில் தொங்கியபடியும், குழந்தைகள் இருவரும் தரையில் இறந்த நிலையிலும் கிடந்துள்ளனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் சுகுமாா், வெள்ளியணை காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம், உதவி காவல் ஆய்வாளா் ஆா்த்தி ஆகியோா் சடலங்களைக் கைப்பற்றி, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். வெள்ளியணை போலீசாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...