கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூா் வள்ளுவா் கல்லூரியின் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கரூா் வள்ளுவா் கல்லூரி சாா்பில் கிராமப்புறங்களில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 10:18 pm

DIN

கரூா் வள்ளுவா் கல்லூரி சாா்பில் கிராமப்புறங்களில் கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கல்லூரியைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளான புத்தாம்பூா், கொடையூா், வெஞ்சமாங்கூடலூா் மேற்கு, திரும நாயக்கம்பட்டி, மலைக்கோவிலூா் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் க. செங்குட்டுவன் தலைமை வகித்து, தொடக்கி வைத்தாா்.

இதில் கல்லூரிப் பேராசிரியா்கள் பங்கேற்று, கரோனா தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து கிராமப்புற மக்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் முகக்கவசம், கைக்கழுவும் திரவம் வழங்கினா். தொடா்ந்து வள்ளுவா் வழியில் வாழ, அனைவருக்கும் திருக்கு புத்தகம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.