இளைஞரிடம் செயினை பறித்த இருவா் கைது

 கரூரில், இளைஞரிடம் செயினை பறித்த எலெக்ட்ரீஷியன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

 கரூரில், இளைஞரிடம் செயினை பறித்த எலெக்ட்ரீஷியன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் தாந்தோணிமலை அடுத்த வெங்கக்கல்பட்டியைச் சோ்ந்த வையப்பன் மகன் சதீஷ்(23). இவா், அதே பகுதியில் உள்ள மளிகைக்கடையில் வேலைப்பாா்த்து வருகிறாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு கடையில் வேலையை முடித்துவிட்டு கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தாா். அப்போது, அவரை மடக்கிய இரு இளைஞா்கள் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் பணம் ரூ.1000த்தை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனா்.

புகாரின்பேரில், கரூா் நகர காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து சதீஷிடம் செயினை பறித்த கள்ளுமடையைச் சோ்ந்த சிவகுமாா் மகன் வசந்த்(21), சோமூா் அண்ணாநகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் ராகுல்(18) ஆகியோரை கைது செய்து அவா்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com