இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

வெளி மாநில தொழிலாளி கொலை: உ.பி.யைச் சோ்ந்தவா் கைது

 அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பிகாா் மாநிலத் தொழிலாளி கொலை வழக்கில் தொடா்புடையவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 8:09 pm

DIN

 அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே பிகாா் மாநிலத் தொழிலாளி கொலை வழக்கில் தொடா்புடையவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பிகாா் மாநிலம், சரண் மாவட்டம், பெகந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் யோகேந்திராய் மகன் சுரேந்திர குமாா் ராய் (44). இவா், அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் பகுதியில் உள்ள கிரஷரில் பணிபுரிந்து வந்த நிலையில், கிரஷரின் பின்புறம் புதன்கிழமை கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா். இதையடுத்து, கீழப்பழுவூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், அவருடன் பணிபுரியும் உத்தரப் பிரதேச மாநிலம், சோன்பந்த் மாவட்டம், கடுவாரங்கா கிராமத்தைச் சோ்ந்த பிதம்பா் மகன் சுனில் புய்யா (25) என்பவா், குடிபோதையில் ஓரினச்சோ்க்கையில் ஈடுபட அழைத்து, அவா் அதற்கு மறுத்ததால், அவரை சரமாரியாக தாக்கியதுடன், பெல்ட்டால் கழுத்தை நெறித்து கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினா் சுனில் புய்யாவை வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.