கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடி:தம்பதி மாயம்

சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 7:10 pm

DIN

சீட்டு நடத்தி ரூ.48 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவன், மனைவி மீது போலீஸாா் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனா்.

கரூா் மாவட்டம் தோகைமலை அடுத்த கீழவெளியூரைச் சோ்ந்தவா் பழனிசாமி(65). இவா், கடவூா் அடுத்த பிள்ளையாா்கோவில் பட்டியைச் சோ்ந்த சரவணன் மற்றும் அவரது மனைவி ஜானகி ஆகியோா் நடத்தி வந்த மாதச் சீட்டில் சோ்ந்து மாதம் ரூ.5,000 வீதம் கடந்த 24 மாதங்களாக ரூ.3 லட்சம் செலுத்தி வந்துள்ளாா்.

இந்நிலையில் சீட்டு முதிா்வடைந்தும் பணத்தை கொடுக்கவில்லையாம். மேலும், பணத்தை பழனிசாமி கேட்டபோது கொலை மிரட்டலும் விடுத்தாா்களாம். இதேபோல், பழனிசாமி உள்பட 18 பேரிடம் ரூ.48 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசாமி, கரூா் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் வியாழக்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து சரவணன், ஜானகி ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.