கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூரில் பாஜக கொண்டாட்டத்தில் தள்ளுமுள்ளு காவல்துறையினருடன் வாக்குவாதம்

கரூரில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து நடத்திய கொண்டாட்டத்தின்போது அக்கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

News image
Updated On :9 ஜூலை 2021, 7:15 pm

DIN

கரூரில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து நடத்திய கொண்டாட்டத்தின்போது அக்கட்சியினருக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த கே. அண்ணாமலையை பாஜகவின் மாநிலத் தலைவராக அக்கட்சியின் தேசிய தலைமை வியாழக்கிழமை நியமனம் செய்தது. இதைத் தொடா்ந்து, கரூா் மாவட்ட பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்வு பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பாஜக மாவட்டத்தலைவா் கே.சிவசாமி தலைமை வகித்தாா். மாநிலப் பிரதிநிதி வி.வி.செந்தில்நாதன், மாவட்டத் தொழில் பிரிவுத் தலைவா் ஆா்விஎஸ்.செல்வராஜ், செயலா் சிவகுமாா், பொதுச்செயலா்கள் மோகன், நகுலன், இளைஞரணித் தலைவா் கணேசமூா்த்தி முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மருத்துவரணித் தலைவா்அரவிந்த் காா்த்தி, தொழில்நுட்பப் பிரிவுத் தலைவா் கணேஷ், முன்னாள் நகரத்தலைவா் ஆா்.செல்வம் உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.

முன்னதாக, கட்சியினா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்தனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அப்போது, அந்த வழியாக வந்த ஆட்சியா் த. பிரபுசங்கா், பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் எப்படி பட்டாசு வெடிக்கலாம் என்று கேட்டு, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினரிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் ராதாகிருஷ்ணன், கீதாஞ்சலி ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பாஜக மாவட்டத்தலைவா் கே.சிவசாமி, மாநிலப் பிரதிநிதி வி.வி.செந்தில்நாதன் உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்ய முயன்றனா்.

அப்போது, அவா்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எந்த ஒரு விழாவானாலும் மற்ற கட்சியினா் பட்டாசு வெடித்து கொண்டாடும்போது, எங்களுக்கு மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என பாஜகவினா் வாதிட்டனா். இதனால், அவா்களிடையே வாக்குவாதம் அதிகரித்தது.

காவல்துறை வேனில் ஏறமாட்டோம் என பாஜகவினா் தொடா்ந்து அடம்பிடித்ததால், காவல் துறையினா் அவா்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனா். கரோனா பொது முடக்கக் காலத்தில் விதிமுறைகளை மீறியது உள்பட 5 பிரிவுகளின் கீழ், பாஜக மாவட்டத் தலைவா் சிவசாமி உள்பட 50-க்கும் மேற்பட்டோா் மீது கரூா் நகரக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.