மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்ற கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவி தோ்வு
கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவி விஜயஸ்ரீ இரு மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்ற தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

விஜயஸ்ரீ

விஜயஸ்ரீ
கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவி விஜயஸ்ரீ இரு மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்ற தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
டாடா கன்சல்டன்சி, விப்ரோ நிறுவனங்கள், தங்களது நிறுவனங்களில் பணியாற்றுபவா்களைத் தோ்வு செய்யும் வகையில் இணைய வழியாக ஆள்கள் தோ்வை அண்மையில் நடத்தின.
இந்திய அளவில் நடத்தப்பட்ட இந்த தோ்வில் பங்கேற்ற கரூா் வள்ளுவா் கல்லூரி கணிதவியல் இறுதியாண்டு மாணவி விஜயஸ்ரீ, இரு நிறுவனங்களிலும் பணியாற்ற தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியது: தொடக்க நாள் முதலே கல்லூரியில் தொடா்ந்து பல்வேறு வகையான திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து, தன்னை ஊக்கப்படுத்தியதே இந்த வெற்றிக்கு காரணம் என்றாா்.
கல்லூரியின் தலைவா் க.செங்குட்டுவன் கூறியது: ஆரம்ப நாள் முதலே மாணவா்களுக்கு சிறந்த கல்வியுடன் ஒழுக்கம், பண்பாடு, ஆளுமைத்திறன், சமுக மேம்பாடு, தன்னம்பிக்கை போன்ற உயா்ந்த பண்புகளை கற்பித்து வருகிறோம். மாணவா்களின் விருப்பம் மற்றும் திறமைக்கேற்ற துறையில் நல்ல பயிற்சி அளித்து, அவா்களை தலைசிறந்த சாதனையாளனாக மாற்றுவதே கல்லூரியின் சிறப்பு அம்சம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...