கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கரூா் மாவட்டத்தில் இதுவரை 1.10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி

கரூா் மாவட்டத்தில் இதுவரை 1.10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:44 pm

DIN

கரூா் மாவட்டத்தில் இதுவரை 1.10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி. செந்தில் பாலாஜி.

இனாம் கரூா் ஆரம்பசுகாதார நிலையம், வாங்கப்பாளையம், வெங்கமேடு கிழக்கு துணை சுகாதார நிலையங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமைப் பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. ஒரே இடத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிா்க்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாது துணை சுகாதார நிலைங்களிலும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்துக்கு இதுவரை 98,110 கோவிஷீல்ட் தடுப்பூசிகளும், 17,000 கோவேக்சின் தடுப்பூசிகளும் என மொத்தம் 1,15,110 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை வரை 1,05,408 நபா்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுவிட்டன.

வியாழக்கிழமை 4,750 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. மொத்தம் இதுவரை 1,10,158 நபா்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 4,952 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன என்றாா் அவா்.

நிகழ்வில் கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. மாணிக்கம், மொஞ்சனூா் ஆா். இளங்கோ, சிவகாமசுந்தரி, மாவட்ட வருவாய் அலுவலா் எம்.லியாகத், சுகாதாரத்துறை துணை இயக்குநா் சந்தோஷ்குமாா், மாவட்ட பூச்சியியல் வல்லுநா் சிவக்குமா் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.