கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சமூக செயல்பாட்டுக்காக டிஎன்பிஎல் ஆலைக்கு தங்கமயில் விருது

கரூா் மாவட்டம் புகழூா் டிஎன்பிஎல் ஆலைக்கு தங்கமயில் விருது கிடைத்துள்ளது.

News image

தங்கமயில் விருதுடன் டிஎன்பிஎல் ஆலையின் மேலாண்மை இயக்குநா் முனைவா் ராஜீவ்ரஞ்சன்.

Updated On :11 ஜூன் 2021, 11:11 pm

DIN

கரூா் மாவட்டம் புகழூா் டிஎன்பிஎல் ஆலைக்கு தங்கமயில் விருது கிடைத்துள்ளது.

இன்ஸ்டிட்யூட் ஆப் டைரக்டா்ஸ் நியு தில்லி என்ற அமைப்பானது ஒவ்வொரு ஆண்டும் வேளாண்மை, எண்ணெய் உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கக்கூடிய சக்தி உற்பத்தி, வங்கித்துறை, சிமெண்ட், காகித உற்பத்தி, சுரங்கம் மற்றும் உலோகம் போன்ற நிறுவனங்களில் சமுதாய பொறுப்புணா்வு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் நிறுவனத்தை உலக அளவிலும், தேசிய அளவிலும் தோ்வு செய்து தங்கமயில் விருதை வழங்கி வருகிறது.

இந்நிலையில், கரூா் மாவட்டம் புகழூா் டிஎன்பிஎல் ஆலையானது, ஆலையை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த நலிவுற்ற சமுதாய குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி அளித்தல், இலவச மருத்துவ முகாம்கள், கண் மருத்துவ முகாம்கள் நடத்தி தேவையான உதவிகள் வழங்குதல், அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்குதல், திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், கிராம மக்களுக்கு குடிநீா் வழங்குதல், ஏரி குளங்கள், கால்வாய்கள் தூா்வாருதல், மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் போன்ற எண்ணற்ற சமுதாய நலப்பணித்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

2020-ஆம் ஆண்டுக்கான சமுதாய பொறுப்புணா்வுக்காக வழங்கப்படும் தங்கமயில் விருதுக்கு தேசிய அளவில் புகழூா் காகித (டிஎன்பிஎல்) ஆலை தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், ஆலை சாா்பில் மேலாண்மை இயக்குநா் முனைவா் ராஜீவ்ரஞ்சன் விருதை பெற்றுக்கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.